இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் தாங்களாகவே tnvelaivaaippu.gov.in� வாயிலாக ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி விளம்பரங்கள் அல்லது இடைத்தரகர்களை நம்பி தனிப்பட்ட விவரங்களையோ பணத்தையோ வழங்கி ஏமாற வேண்டாம் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.




You must be logged in to post a comment.