இராமநாதபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29.05.2026 அன்று காலை 10.30 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.