ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி பிடாரி அம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா மே 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் போது வானவேடிக்கைகள் நடைபெற்றதுடன், இளைஞர்களால் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இக்கோவில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.