சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் ஷாமா பர்வீன் மற்றும் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வத்ஸ் தலைமையில் இந்த பரிசீலனை நடைபெற்றது.
இந்தத் தொகுதியில் மொத்தம் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் 8 வேட்புமனுக்கள் விதிமுறைகள் பூர்த்தி செய்யாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டன.
மீதமுள்ள 31 வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டன. இதில் எஸ். மாங்குடி (காங்கிரஸ்), சீமான் (நாம் தமிழர் கட்சி), தேர்போகி பாண்டி (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்), பிரபு (தமிழக வெற்றி கழகம்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அடங்குவர்.
இதன் மூலம் காரைக்குடி தொகுதியில் தேர்தல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




You must be logged in to post a comment.