28 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஈரான் மீது கொடூர தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. தலைநகரில் சரமாரி ‘அட்டாக்’.. வெடிக்கும் பெரிய போர்?

ஈரான் மீது கொடூர தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. தலைநகரில் சரமாரி ‘அட்டாக்’.. வெடிக்கும் பெரிய போர்?

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2026, 6:31 am
இஸ்ரேல், ஈரானை குறிவைத்து இன்று தொடர் கொடூர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதன் போது, ஈரானின் தலைநகரான தெஹரானில் விமான தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, எப்போது ஈரானுக்கு தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதல், ஈரானுக்கு எதிரான மோதல்களை மேலும் தீவிரமாக்கும் வாய்ப்பு உள்ளது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரான் அவசர நிலையை அறிவித்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், ஈரானில் அச்சம் மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் இராணுவ நிலவரங்களை மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!