24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் சுகாதாரச் சீர்கேடு: சாக்கடை அடைப்பு, குடிநீர் தட்டுப்பாடு; உடனடி நடவடிக்கை கோரி மக்கள் கோரிக்கை.!

மேட்டுப்பாளையத்தில் சுகாதாரச் சீர்கேடு: சாக்கடை அடைப்பு, குடிநீர் தட்டுப்பாடு; உடனடி நடவடிக்கை கோரி மக்கள் கோரிக்கை.!

எழுதியவர்: Baker BAker August 14, 2026, 8:57 am

கோவை மாவட்டத்தின் பிரதான நுழைவு வாயிலாகவும், நீலகிரி மலையின் அடிவார நகரமாகவும் விளங்கும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுகாதாரச் சீர்கேடு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

33 வார்டுகளைக் கொண்ட இந்நகராட்சியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், நீலகிரிக்குச் செல்லும் முக்கிய சுற்றுலாப் பாதையாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்நகரை கடந்து செல்கின்றனர்.

நகரின் மையப்பகுதியில் உள்ள சக்கரவர்த்தி துணிக்கடை எதிரே உள்ள மும்முனைச் சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை அடைப்பு நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் டி.டி.எச். ஹபிபுல்லா கூறுகையில், நகரின் மையப்பகுதியில் உள்ள சாக்கடை அடைப்பைக் கூட உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

நடூர், டேங்க்மேடு, சாந்தி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், அதைப் பெற மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் பிரதான சாலைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் உரிமை கோரப்படாத மாடுகள், ஆடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிவதால் போக்குவரத்து நெரிசலுடன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை அடைப்புகளை சரிசெய்து, குப்பைகளை அகற்றி, கிருமிநாசினி தெளித்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தொடர்பு விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!