இராமநாதபுரம் மாவட்டத்தில் 1435-ம் பசலி ஜமாபந்தி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்களின் குரலை நேரடியாக கேட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ.22,500 இறப்பு நிவாரண உதவித் தொகைக்கான ஆணையை வழங்கி அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்தார்.
ஜமாபந்தி என்பது வெறும் அலுவல் நிகழ்வு அல்ல; மக்களின் பிரச்சினைகளுக்கு நிர்வாகம் நேரடியாக செவிசாய்க்கும் மக்கள் நல மேடையாகும் என்பதை இந்நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.
மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு, மனுக்களுக்கு விரைவான தீர்வு கிடைக்க வழிவகுத்து வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்




You must be logged in to post a comment.