17 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பழனி மலைக் கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு:

பழனி மலைக் கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு:

எழுதியவர்: Askar April 15, 2026, 5:48 pm

பழனி மலைக் கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு:

பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி மேற்கொண்டு வரும் தீவிர தேர்தல் பிரச்சாரம், நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பழனி அருகே உள்ள வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று ஆடலூர் ராமமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தனது தேர்தல் சின்னமான ‘மோதிரம்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அவர், மலைக்கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போவதாக உறுதி அளித்தார்.

அவருக்குச் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களும், மலைக்கிராம இளைஞர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதிகரிக்கும் செல்வாக்கு – பின்னணி என்ன? ஆடலூர் ராமமூர்த்தி அதே பகுதியைச் சேர்ந்தவர் (மண்ணின் மைந்தன்) என்பது அவருக்குப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது.

எளிமையான சுபாவம், யாரையும் எளிதில் சந்திக்கும் பண்பு மற்றும் நீண்டகாலமாக அவர் ஆற்றி வரும் சமூக சேவை ஆகியவற்றால் மக்கள் மத்தியில் ஏற்கனவே அவருக்கு நற்பெயர் உள்ளது.

மேலும், சமூக ஆர்வலராக அவர் இப்பகுதி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருவதால், சமுதாய வாக்குகளும் அவருக்கு அதிகளவில் களம் இறங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.முக்கியக் கட்சிகளுக்கு இணையாக ஒரு சுயேச்சை வேட்பாளர் மலைக்கிராமங்களில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பழனி தொகுதி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மோதிரம்’ சின்னத்திற்கு கிடைத்து வரும் இந்த ஆதரவு, தேர்தல் களத்தில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என தொகுதி மக்களிடையே பேசப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!