24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ட்ரம்ப் ஒரு பொய்யர்! பயத்தில் பின்வாங்குகிறார்!-அமெரிக்காவை எள்ளி நகையாடும் ஈரான்!

ட்ரம்ப் ஒரு பொய்யர்! பயத்தில் பின்வாங்குகிறார்!-அமெரிக்காவை எள்ளி நகையாடும் ஈரான்!

எழுதியவர்: Askar March 23, 2026, 7:29 pm

“ட்ரம்ப் ஒரு பொய்யர்! பயத்தில் பின்வாங்குகிறார்!” – அமெரிக்காவை எள்ளி நகையாடும் ஈரான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 5 நாள் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை குறித்த செய்தியை ஈரான் அடியோடு மறுத்துள்ளது.

“ட்ரம்ப் ஒரு பொய்யர்” என்றும், ஈரானின் உக்கிரமான பதிலடிக்கு பயந்தே அவர் இந்த நாடகத்தை ஆடுகிறார் என்றும் ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

 இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது ஈரான்  தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள  தாக்குதலுக்கு  அஞ்சியே அமெரிக்கா இந்த பின்வாங்கலைச் செய்துள்ளது.

“எங்கள் மீது கை வைத்தால் மத்திய கிழக்கு முழுவதும் எரியும்” என்கிற ஈரானின் எச்சரிக்கை வாஷிங்டனை அதிரவைத்துள்ளது.

​ஈரானுடனான இந்த தேவையற்ற போரினால் அமெரிக்கா சந்தித்து வரும் பின்னடைவுகள் அம்பலமாகியுள்ளன:

​அமெரிக்காவில் விலைவாசி உயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.

​ ஈரானுடனான மோதலில் அமெரிக்கா இதுவரை பல பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

​மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்கள்  இப்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளன.

​ஈரானுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் கூறுவது முற்றிலும் பொய் என ஈரான் தரப்பு கூறுகிறது.

தங்களின் தோல்வியை மறைக்கவும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவுமே ட்ரம்ப் இந்த ‘சமாதான’ நாடகத்தை அரங்கேற்றுகிறார் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

​ஈரானின் வலிமையை அமெரிக்கா இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் போர்ப் பிரகடனம், மறுபக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை என அமெரிக்காவின் இரட்டை வேடம் இப்போது உலக அரங்கில் சந்தி சிரிக்கிறது.

ஈரானின் ஏவுகணைகள் எந்நேரமும் பாயத் தயாராகவே உள்ளன!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!