தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு, அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ள நிலையில், 3 மாநிலங்களையும் சேர்த்து 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 1800 மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலுக்கான முடிவுகள், தமிழ்நாடு, மேற்குவங்கம் சேர்த்து மே 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.




You must be logged in to post a comment.