யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..

யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..

பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார்.

வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு.

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.

சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு

திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, தற்போது திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!