12- வது உலகத் தமிழ் மாநாடு!- மொரிசியசு நாட்டில் நடத்த திட்டம்..

12- வது உலகத் தமிழ் மாநாடு!- மொரிசியசு நாட்டில் நடத்த திட்டம்..

சென்னை செம்மஞ்சேரியில் கடந்த 43 ஆண்டு காலமாக சிறப்புடன் இயங்கி வரும் ஆசியவியல் நிறுவனத்தின் 43 வது நிறைவு விழா Include உலகத் Andrew சந்திப்பு விழா நடைபெற்றது.

இதில் ஆசியவியல் நிறுவன இயக்குநர்,நிறுவனர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற துணைத் தலைவர்-முனைவர் ஜி.ஜான் சாமுவேல வரவேற்பு உரையாற்றினர். சித்த மருத்துவர் நாராயணன் தலைமை தாங்கினார்.

வி ஜிபி உலகத் தமிழ் சங்கத் தலைவர் வி ஜிபி சந்தோசம், உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு தலைவர் சட்டக் கதிர் சம்பத் மற்றும் மொரிசியசு தமிழ் லீக் தலைவர் பார்லன் சுப்பிரமணியன் உள்ளிட்ட மொரிசியசு நாடு தமிழ் ஆய்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு- மொரிசியசு நாட்டுக்கு இடையே தமிழர் பண்பாடு – கலாச்சாரம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மொரிசியசு நாட்டில் 12 வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்தும் ஆசியவியல் நிறுவனர்- இயக்குநர் முனைவர் ஜான் சாமுவேல் மற்றும் மொரிசியசு தமிழ் லீக் தலைவர் பார்லன் சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!