கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா எக்ககுடி கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் மேடையில் மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர் தலைமையிலும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராமபிரதீபன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இம்முகாமில் 1,40,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் 31 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும் குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப் பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 24 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மேலும் வேளாண்மைத்துறை சார்பில் 2,00,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இம் முகாமில் கீழக்கரை வட்டாட்சியர் பா.இளங்கோவன் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார்.கணேசன் வட்ட வழங்கல் அலுவலர் கே.எம்.தமிம்ராஜா மண்டலதுணை தாசில்தார் பெனிதகுமார், வருவாய் ஆய்வாளர் கோகிலா, கிராம நிர்வாக அலுவலர்.பூபதி எக்ககுடி ஜமாத் பிரமுகர்கள் அப்துல்காதர் சிராஜ்தீன் அஸ்கர்அலி மற்றும் கொத்தங்குளம் கிராமத் தலைவர்.முனியாண்டி உள்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். எக்ககுடி கிராமத்தில் முதன் முறையாக இது போன்ற முகாம் அமைத்த தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









