ராமநாதபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர் ! நகராட்சியை கண்டித்து நகைக்கடை வியாபாரிகள் சாலை மறியல் !!

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையான காசு கடை பஜார் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி முழுவதும் சாக்கடை கழிவு நீர் ஆறு போல ஓடுவதால் பொதுமக்கள் பாதசாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினர் இது தொடர்பாக ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது எனவே உடனடியாக இதனை சரி செய்ய வலியுறுத்தி நகைக்கடை வியாபாரிகள் ராஜவீதி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!