சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு..

சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு..

வெள்ளிக்கிழமை (2.02.2024) அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கட்சிப் பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல். திருமாவளவன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!