திருவள்ளூர் எரும்பி காவலர் காட்பாடியில் தூக்கிட்டு தற்கொலை.

திருவள்ளூவர் மாவட்டம் எரும்பி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(23). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி சேவூர் 15 – வது சிறப்பு காவல்படை பட்டாலியனில் தங்கி காவலராக தங்கி பணிபுரிந்து வருகிறார்.நேற்று அஜித்குமார் தன்னுடைய குடியிருப்பு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். அஜித்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கே.எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!