கழிஞ்சுர் பகுதியில் முரம்பு மண் கடத்தலில் ஈடுபட்டு வந்த லாரி ஓட்டுநர் கைது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் முரம்பு மண் கடத்துவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் விருதம்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் கழிஞ்சூர் ரயில்வே கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரியவந்தது இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட அணைக்கட்டு தாலுக்கா பென்னாத்தூர் கேசவபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் கோபிநாத் என்பவனை கைது செய்து 4 யூனிட் முரம்பு மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து விருதம்பட்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!