வேலூர், ராணிப் பேட்டை மாவட்டத்தில் மத்தியகுழு ஆய்வு

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. அதன்படி தமிழக பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கண்டிப்பேடு, பொன்னை அணைக்கட்டு அணையின் ஷட்டர். மாதாண்டகுப்பம் Uகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் அதேப்போல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, ஆற்காடு தாலுகாவில் உள்ள பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை இன்று தமிழக முதல்வரிடம் சமர்பித்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!