வேலூர் அருகே வேன் மோதி காவலர் பலி

வேலூர்- ராணிப்பேட்டை எல்லை பகுதியான பிள்ளையார்குப்பத்தில் இன்று விடியற்காலை வாகன தணிக்கையில் போலீசார் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது சென்னையை நோக்கி பூக்களை ஏற்றி சென்ற வேன் பணியில் இருந்த காவலர்கள் மீது மோதியது.இதில் 15-வது பட்டாலியனை சேர்ந்த காவலர் அய்யனார் மூர்த்தி (28) தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தனுக்கு கால் முறிவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!