ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா.. 4

தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஆய்க்குடி அமர் சேவா சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டது.இதில் ஆய்குடி அமர் சேவா சங்கம் சார்பில் ஒருமைப்பாட்டு சாவடி மற்றும் கண்காட்சி சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சுரண்டை மகாலட்சுமி மருத்துவமனை டாக்டர் முருகையா தலைமை வகித்து துவக்கி வைத்தார். சுரண்டை தொழிலதிபர் எஸ்வி தர்மர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு, அரசின் திட்டங்கள் குறித்த விளக்கங்கள், அடையாள அட்டை பெறுவது குறித்த விளக்கங்கள், வாழ்வாதாரத்தை உயர்த்த சுய தொழிலுக்காக வழிமுறைகள், தேவையான உபகரணங்கள் பெறுதல் குறித்து விளக்கினர். இதில் அமர் சேவா சங்க பணியாளர்கள் வேல்மயில், நாகம்மாள், மஞ்சுளா, மணியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!