காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்க்கை துவக்கம்

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது. இந் தாண்டு அறிவியல் மற்றும் கணிதம், உயிரியல் பிரிவில் ஆங்கில வழி சேர்க்கையும் துவங்கி நடை பெற்று வருகிறது. மாணவ – மாணவியர் சேர்க்கையை தலைமை ஆசிரியர் வி.தயாளன் துவக்கி வைத்தார். மாணவர்கள் முக கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ஆர்.எஸ்.அஜிஸ் குமார், ஆசிரியர்கள் டி.ஜெயஜோதி, ஜி.சந்திரலேகா. ஜி.சந்திரசேகரன், ஆர்.பிரபாவதி எம்.வசந்தி, பி.பிரபாகரன் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!