வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா முன்னிட்டு தாசில்தார் பாலமுருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு இனிப்பு வழங்கி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மண்டல துணை தாசில்தார் முரளிக்குமார் வருவாய் அலுவலர் சிவக்குமார்.அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் அதேப்போல் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பிடிஓ தயாளன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பின்பு இனிப்பு வழங்கினார். இதில் மேலாளர் சுதாகர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.