காட்பாடி அருகே போலி மருத்துவர் 2 பேர் கைது. 3 கிளினிக்கு சீல்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு கிராமத்தில் போலீ மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறைக்கு தகவல் கிடைத்தது அதன் படி வேலூர் தலைமை அரசு மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு குழுவும் தாசில்தார் பாலமுருகன் மற்றும் திருவலம் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்த போது மருத்துவ படிப்பு படிக்காமலும் கார்ணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னரசன் (55) பாரதி (42) ஆகியோர் போலீயானவர்கள் என்று தெரிய வந்தது அதன் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அதேப்போல் இந்த பகுதியில் ஓமியோபதி மருத்துவம் வைத்து கொண்டு ஆங்கிவ மருந்து சிகிச்சை அளித்த சத்துவாச்சாரியை சேர்ந்த சுரேந்திரன் தப்பி ஓடினார். தாசில்தார் பாலமுருகன் முன்னிலையில் 3 கிளினிக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கே.எம்.வாரியார் நிருபர் – வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!