ஆலங்குளம் பகுதியில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அம்பை ரோடு திரையரங்கம் அருகே அமைக்கபட்டிருந்த பேரிகார்டு திடீரென அகற்றப்பட்டது.இந்த சாலை பொங்கல் விழா காலம் என்பதால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படும் முக்கிய பகுதியாக உள்ளது. வாகன நெரிசலினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.எனவே,மனித உயிர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் மிகுந்த அக்கறை கொண்ட ஆலங்குளம் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், வாகன விபத்துகள் ஏற்படாதிருக்க மீண்டும் பேரிகார்டுகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!