வாணியம்பாடி அருகே கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பி.எம்.டபிள்யூ சொகுசு கார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் மீது வேகமாக மோதியது இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருபவர் ரோஷன் குமார்  22 . மதியம் தனது வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இளைஞர் மீது மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்டுத்திய கார் நிற்காமல் வேகமாக சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்தி சென்று நெக்குந்தி சுங்கச்சாவடியில் நிறுத்தினர். காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில் இச்சம்பவம் குறித்து அங்கு வந்த கிராமிய போலீஸார் இறந்துபோன ரோஷன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த கிரானைட் தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு கார் என்பது தெரியவந்துள்ளது.கார் ஓட்டி வந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். அதிவேகமாக வந்த கார் இளைஞர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!