காட்பாடியில் அதிரடியாகசாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்த டிஎஸ்பி

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் .அங்கு டவுன் பஸ் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அறிந்த காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டி அதிரடியாக ரோட்டில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்தார்.வேலூருக்கு செல்லும் அனைத்தும் சித்தூர் பஸ் நிலையத்தில் நுழைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறி அவரே போக்குவரத்தை சீர் செய்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலாஜி உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன், ராஜமோகன் ஆகியோரும் போக்குவரத்தை சீர் செய்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!