‘நான் முதல்வன்’ கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் காணொலி மூலம்துவக்கவிழா.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நான் முதல்வர் என்ற தலைப்பில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்துவக்கிவைத்து பேசினார்.இந்த நிகழ்ச்சி நேரடியாக காணொலி மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்நுட்ப பொறியியல் மற்றும் பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்கள் நேரடியாக கண்டுகளித்தனர். பல்வேறு துறை வல்லுநர்கள் இதில் பங்கேற்று அறிவுரை வழங்கினர்.’இந்த நிகழ்ச்சியை வேலூர் அரசு தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 350 பேர், கல்லூரி அரங்கில் பங்கேற்றனர்.இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் மா.அருளரசு, துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, ஒருங்கிணைப்பாளர் முருகவேல், பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், பாரதிராஜா மற்றும் உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!