காட்பாடியில் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியை சோ்ந்த பரந்தாமன் (30). இவர் தனது நண்பருடன் ஒரே பைக்கில் சென்றார். காட்பாடி சில்க் மில் அருகே வேலூரை நோக்கி சென்றபோது ஆட்டோ உரசியதில் பின்னால் உட்கார்ந்து சென்ற பரந்தாமன் தடுமாறி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாலாஜியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறை வழக்குபதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!