வேலூரில் மருத்துவ சீட் வாங்கி தருவதவதாக ரூ 57 லட்சம் மோசடி3 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப் புதுச்சேரி பகுதியை சேர்ந்த பொறியாளர் சீனிவாசன் தனது மகன் ஈஸ்வர் (20) என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வு பெற்றவருக்கு வேலூர் சிஎம்சியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் பெற வேலூர் சி எஸ் ஐ சர்ச் பாதிரியார் சாது சத்யராஜ் மக்கள் முன்னேற்ற கழகமாவட்ட செயலாளர் தேவா அவரின் தம்பி அன்பு கிராண்ட் ஆகியோரிடம் ரூ 57 லட்சம் கொடுத்தார். சீட்டும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் சீனிவாசன் வேலூர் எஸ்.பி. செல்வகுமாரிடம் புகார் கொடுத்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி மகேஸ் தலைமையில் விசாரணை செய்து நேற்று 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!