கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக தோழமை கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..

கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக தோழமை இயக்கங்களை ஒன்றுதிரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை தாங்கினார். பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் மற்றும் வீரகுல தமிழர் படை மாவட்ட செயலாளர் மதுகணேஷ், மாநில செயலாளர் பழனி முருகன், ஆதி தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு sdpi கட்சியின் நகர் தலைவர் பைசல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர் தலைவர் நதீர்,அமமுக அம்மா பேரவை நகர் தலைவர் ஜீவா, வீரகுல தமிழர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார், பிரபு, ராஜா, வேலவன், கார்த்தி, விக்ரம்,திருமுருகன், காளீஸ்வரன், சந்துரு, சூர்யா, ஹரி, ராஜேஷ், மற்றும் வீரகுல தமிழர் படை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!