“நாங்கள் ஏன் போராடுகிறோம்”… கிராம அலுவலர்கள் மக்களை நேரில் சந்தித்து நோட்டீஸ் வினியோகம்..வீடியோ..

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவைச்சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சின்னாளபட்டி பகுதிகளில் “நாங்கள் ஏன் போராடுகிறோம்” என்ற தலைப்பில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை பொதுமக்களை சந்தித்து கொடுத்து வருகின்றனர்.

அமமுக தலைவர் டி. டி. வி. தினகரன், பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரீசிலனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி;- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!