இராமநாதபுரம் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு,  ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கடலாடி வட்டாட்சியர் மற்றும் பரமக்குடி சார் ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதம்  கடலாடி வட்ட தலைவர் பழனி தலைமையில் மாவட்ட கொள்கை பரப்பு செலாளர் கார்த்திகை குமார், மற்றும் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100 பேர் கடலாடி தாசில்தார் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!