தொடர் மழையில் நிரம்பிய வண்ணாங்குண்டு பெரிய ஊரணி..வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களாகிய வண்ணாங்குண்டு மற்றும் பிற பகுதிகள் கடந்த பல வருடங்களாக முறையான மழை பொழிவு இல்லாததால் குளங்கள், கிணறுகள் மற்றும் குட்டைகள் காய்ந்து வறன்டு போய் இருந்தது.

ஆனால் இந்த வருடம் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையினால் இப்பகுதிகளில் உள்ள ஊரணிகள் மற்றும் கண்மாய்கள் நிரம்ப தொடங்கியுள்ளது.  அதிலும் முக்கியமாக பல வருடங்களாக நிரம்பாமல் வற்றியிருந்த வண்ணாங்குண்டு பெரிய ஊரணி நிரம்ப தொடங்கியுள்ளது.

இக்கண்மாய்க்கு வரும் நீர் வீணாகாமல் நிரம்புவதற்கு முக்கிய காரணம் மழையின் தொடக்கத்திலேயே அவ்வூர் இளைஞர்கள் கண்மாயை தூர் வாரி, மழை நீர் வீணாகாமல் நீர் கண்மாயில் சேர்வதற்கான வழிகளை உண்டாக்கி வைத்ததும் முக்கிய காரணமாகும், அவர்கள் செயல்பாடுகள் நிச்சயமாக பாராட்டுமலுக்குரியது.

செய்தி:- SH.பாசித், வண்ணாங்குண்டு..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!