இராமநாதபுரம் வண்ணாங்குண்டில் மின்னொளி கால்பந்து போட்டி…

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் முதலாம் ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நாளை வெள்ளிக்கிழமை (02/03/2018) மாலை 5மணி அளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு முதல் பரிசாக ₹10001/- இரண்டாம் பரிசாக ₹.5001/- மற்றும் மூன்றாம் பரிசாக ₹.3001/- வழங்கப்பட உள்ளது. இப்போட்டியின் முடிவிலும் சிறந்த ஆட்ட நாயகன் விருது, தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட உள்ளது.

இக்கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 கால்பந்து அணிகள் பங்கேற்கும் என அறியப்படுகிறது. இக்கால்பந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வண்ணாங்குண்டு கால்பந்து அணியினர்(VFC) மற்றும் போட்டி குழுவினர் செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!