வந்தே பாரத் விரைவு ரயிலில் கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி கதவை உடைத்து மீட்பு..
சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற வந்தே பாரத் விரைவு ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணி ஒருவர் பயணம் மேற்கொண்டார்,
C 6 ரயில் பெட்டியில் பயணம் செய்த பயணி கழிவறைக்கு சென்று விட்டு கதவை திறக்க முயன்ற போது கதவு திறக்கப்படவில்லை, நீண்ட நேரத்திற்கு பின்பு டிக்கெட் பரிசோதகர் உத்தரவுப்படி ரயில்வே ஊழியர்கள் கதவை உடைத்து பயணியை மீட்டுள்ளனர், கழிவறை கதவுகள் வெளியில் இருந்து திறக்கும் வகையில் வடிவமைக்கப்படாத காரணத்தால் கழிவறை கதவை உடைத்து பயணி மீட்கப்பட்டுள்ளார், மேலும் அவசரமாக பயணிகளை மீட்க வந்தே பாரத் ரயிலில் தொழில்நுட்பக் கருவிகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்..செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









