ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆர்.எஸ.மங்கலம் பேரூராட்சி பரக்கத் தெரு பிரிட்டோ ஸ்கூல் எதிர்புறம் காவிரி குடிநீரை கட்டுப்படுத்துவதற்காக தொட்டி அமைக்கப்பட்டு பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது.பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூரியும் கடமைக்காக ஏனோ தானோ என்று சரியான திட்டமிடல் இல்லாமல் தற்காலிகமாக சரி செய்கின்றனர்.அருகில் பிரிட்டோ மழலையர் தொடக்கப் பள்ளி செயல்படுவதால் உடைந்து கிடக்கும் தொட்டியில் சிறுவர்கள் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.குறுகிய சாலையில் ஒருபுறம் காவிரி குடிநீருக்காக தோண்டப்பட்டு மேடு பள்ளமாகவும் மறுபுறம் தொட்டியும் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

You must be logged in to post a comment.