முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்.. பாஜகவினர் நினைவாஞ்சலி..

இராமநாதபுரம், ஆக.16-

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் தரணி ஆர். முருகேசன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.சண்முகராஜ், மாவட்ட பார்வையாளர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலர்கள் பவர் ஏ.நாகேந்தின், மணிமாறன், மாவட்ட ஆத்ம கார்த்தி, மாநில துணை தலைவர் கலாராணி கிருபா ரத்தினம், மாவட்ட துணை தலைவர் சங்கீதா, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் எஸ்பி குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!