கீழக்கரையில் கொரோனா தடுப்பூசிக்கு பரிசு அசத்தும் பொது நல சங்கம் …

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள்டீம் ஏற்பாட்டில் சுகாதார துறை சார்பில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இம்முகாமை கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன்,திருப்புல்லாணி வட்டார அரசு மருத்துவர் ராசிக்தீன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அப்போது கொரோனா தடுப்பூசி போட வந்த 10 பெண்கள் சில்வர் பானை பரிசாக வழங்கப்பட்டது. இம்முகாம் இறுதியில் கொடுக்கப்பட்ட டோக்கன் இன் அடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 3நபர்களுக்கு மின்விசிறி வழங்கப்படுமென மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் மற்றும் மக்கள் டீம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதில் துணை மண்டல வட்டாட்சியர் பழனிக்குமார்,கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில் குமார்,மக்கள் டீம் காதர் மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தலைவர் சிந்துபாத் ஹபிப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!