உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் போதிய அரசு பேருந்துக்கள் இயக்கப்படாததால் பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு இன்று ஒருநாள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மேலும் அத்யாவசிய பணிக்கு மக்கள் நலன் கருதி அரசு பேருந்துகள் இயக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் போதிய அளவில் அரசு பேருந்துக்கள் இயக்கப்படாததால் பேருந்து கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

மேலும் போக்குவரத்து பணிமணையிலிருந்து முக்கிய பகுதிக்கு மட்டும் சுமார் 1மணி நேரத்திற்கு 1அரசு பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்படுவதால் மற்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும் பேருந்துக்கள் இயக்கபடாததால் பேருந்து நிலையம் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்;ட நிலையில் நான்கு சக்கர வாகனங்களே அணிவகுத்து பார்க் செய்திருந்தனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!