உசிலம்பட்டி – ஆர்டிஓவிற்கு பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகள் வழங்கிய 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினர்.

துரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் ஆர்டிஓவிற்கு பிறந்த நாள் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்திரபாண்டியன் தலைமையில் தன்னார்வ இளைஞர்கள்.

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ ராஜ்குமாரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர் உசிலம்பட்டி பகுதிகளில் விவசாயத்திற்கும், பசுமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகளும், அவருடைய திருவுருவ படமும் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!