உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் சுகாதாரதுறை சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையாக வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரதுறை சார்பில் பொதுமக்களுக்கு இலவமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் சுகாதாரதுறை உத்தரவுப்படி தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார துறை மற்றும் உசிலம்பட்டி நகராட்சி இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம் அமைக்கப்பட்டன. அதனைதொடர்ந்து பொதுமக்கள் தங்களது ஆதார்எண் கொடுத்துவிட்டு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!