டெல்லி விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமையில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் முன்னிலையில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் டெல்லி விவசாயிகள் மீது பொய் வழக்கு போட சொல்லும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!