உசிலம்பட்டி பகுதியில் தெய்வீக தமிழக சங்க புத்தகத்தை பாஜக சார்பில் கிராமந்தோறும் விநியோகம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி, சீமானுத்து, நடுப்பட்டி,உத்தப்பநாயக்கனூர் உள்ளிட்ட 18 ஊராட்சிகளிலும் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு புத்தகத்தை வழங்கினர்.

உசிலம்பட்டியில் வடக்கு ஒன்றியம் தலைவர் சின்னசாமி தலைமையில் மாநில செயற்குழு பிரச்சார உறுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித் குமார் தலைமை வகித்தார் இதில் மாவட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.எஸ். சதீஷ்குமார் மற்றும் உசிலம்பட்டி ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.எஸ் துணைச் செயலாளர் தேவகுமார், வடக்கு மண்டல செயலாளர் நீதி, இளைஞர் அணியின் மாவட்ட பொதுச்செயலாளர் தீபன் முத்தையா, ஐ டி பிரிவு மண்டல தலைவர் குபேந்திரன்,விவசாய அணி மண்டல தலைவர் ஜெயபாண்டி முக்கிய நிர்வாகி பாலாஜி மற்றும் பிஜேபி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!