முன்னாள் எம்.எல்.ஏ பி.என்.வல்லரசு நினைவு நாள் அனுசரிப்பு

.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ பி.என் .வல்லரசு நினைவுநாளில் பார்வர்டு பிளாக் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்   .                               அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் கட்சி சார்பாக மாநில தலைவர் நவமணி தலைமையில் மாநிலச் செயலாளர் மகேஸ்வரன் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் மணிகண்டன், பொருளாளர் காசிராசன் மதுரை மாநகர் மாணவரணி ஆசைகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வல்லரசு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். அகில இந்திய வல்லரசு பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் அம்மாவாசை தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் வல்லரசு பிரிவு வழக்கறிஞர் பி.பி. இளவரசு தலைமையிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

.உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!