உசிலம்பட்டி கண்மாயை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள 60ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கடந்த 3வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சீமைக்கருவேல மரங்ஙள் நிறைந்து காணப்பட்டது. மேலும் உசிலம்பட்டி பகுதியில் இறைச்சிகடைகளில் சேரும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உசிலம்பட்டி 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழு செளந்தரபாண்டி தலைமையில் இளைஞர்கள் இந்த 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயை தூர்வார ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த பணிகளை உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார், காவல்துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் சீமாணுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.மேலும்  மும்மதத்தைச் சோ்ந்த பொியோா்களும் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு பணிகளை விரைவில் முடிக்க ஆண்டவனை பிராா்த்தனை செய்தனா். அதனை தொடர்ந்து தூர்வாரும் பணிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொடா்ந்து 2 வது நாளான இன்று (சனிக்கிழமை) மதுரை மாவட்ட நன்சென் புஞசை விவசாயிகள் சங்கத் தலைவா் மணிகண்டன் பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினாா்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!