உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல்

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கிராம நிர்வாக அதிகாரி ரம்யா பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக நீதிமன்றம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளன. விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவேண்டும். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் அதிகாரிகளிடம் அனுமதியில்லாமல் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தொட்டப்பநாயக்கணூர் கிராமநிா்வாக அலுவலா்       ரம்யா விநாயகர் சிலையை பறிமுதல் செய்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் பானுகோபனிடம் ஒப்படைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!