உசிலம்பட்டி-ஆனந்த நகர் 4 வது தெருவில் சாக்கடை நீர் வீட்டிற்குள் செல்லும் அவலம் .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல்  மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இரவு  பெய்த மழையினால் உசிலம்பட்டி நகராட்சி ஆனந்த நகர் 4 வது தெருவில் சாக்கடை நீர் வீட்டிற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது.முறையான சாக்கடையில் நீர் செல்லாத காரணத்தினால் தெருவில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

அதன் மூலம் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.கொரோனா போன்ற காலங்களில் முறையான சாக்கடை வசதி செய்து நோய் தொற்றிலிந்து காப்பாற்ற பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!