உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் மதுபோதையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலிசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(60).மனைவி செல்வி (50).இவர்களுக்க 2 ஆண் 1 பெண் குழந்தை உள்ளனர்.ஆடு மேய்க்கும் தொழிலை குலத்தொழிலாக கொண்ட இவர்கள் வடுகபட்டியில் ஆட்டுக்கிடை அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.மற்ற இருவருக்கும் திருமணமாண நிலையில் இளையமகன் மாயக்கண்ணன் (20) கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனது தந்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார்.இவர் மது போதைக்கு அடிமையானவர் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் தந்தை வேலுச்சாமி இரவில் பட்டியில் (ஆடு கட்டி வைக்கும் இடம்) படுத்துக் கொள்ள தாய் செல்வி வீட்டில் தனியே இருந்துள்ளார்.நள்ளிரவில் வீடு திரும்பிய மாயக்கண்ணன் குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.போதையில் தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதில் வாக்குவாதம் முற்றி அருகிலிருந்த அரிவாள்மனையால் தாயை சராமாரியாக வெட்டியுள்ளார்.இதில் செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.அதிகாலையில் வீடுதிரும்பிய வேலுச்சாமி வீட்டில் தனது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப்பார்த்து போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.உசிலம்பட்டி தாலுகா போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவ மணைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தாயைக் கொலை செய்த மாயக்கண்ணணை கைது செய்து வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.மதுபோதையில் பெற்ற தாயையே மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!