நரிக்குறவ குடும்பத்திற்கு உதவி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் போத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி தலைமையில் நரிக்குறவர்கள் 50 குடும்பம் இருக்கும் பகுதிகளில் கொரனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பிறகு அங்கு உள்ள அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. இந்த வைரஸின் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் நரிக்குறவர் மக்கள் வெளியே செல்லவும் வேலை செய்யவும் முடியாததால் அவர்களுக்கு 500 கிலோ அரிசி வழங்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் போத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் ஊராட்சி செயலாளர் ஜெகன். மற்றும் கிருபாகரன். மற்றும் பொதுமக்கள் கலந்து கொன்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!