உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சௌந்தர்யா தேசியகொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புக்கள் வழங்கினர்.அதனை தொடர்ந்து தமிழ் நடனக்கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும் அங்குள்ள கிளை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு கோட்டாட்சியர் சௌந்தர்யா இனிப்புகள் வழங்கினார்.

இதே போல் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனிசுதந்திரம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!